உன்னால்தான் உன்வாழ்வு

பாவரசு குறள்…

அஞ்சி நடுங்கி அடிபடும் வாழ்வறு!
கெஞ்சிடும் வாழ்வென்றும் கேடு!

நேயத்தை நெஞ்சில்வை! நேர்கொண்ட பார்வைகொள்!
காயங்கள் யாவும் கடந்து!

வர்க்கம் இரண்டன்றி வையத்தில் வேறில்லை!
உற்றறிவீர்! காண்பீர் உயர்வு!

உண்மைகள் செய்ய உறுதியை ஏற்றிடு!
வன்மையால் காண்பாய் வளம்!

இழித்தும் பழித்தும் இதயம் குளிர்வோர்
கழிவென செல்வாய் கடந்து!

அடிமைத் தனத்தை அறவே ஒழிப்போம்!
முடிப்போம் கொடுமை முனைந்து!

நரிபோல் உலவுவார்! நாய்போல் திரிவார்!
கரிய மனம்கொண்டோர் காண்!

மிதித்து நடப்போரை மேலேறி வீழ்த்து!
விதிகளை மாற்று வெகுண்டு!

உன்னால்தான் உன்வாழ்வு! உண்மை உணர்ந்திடுவாய்!
கண்டிடுவாய் என்றும் களிப்பு!

பொய்யுரைத்து வாழ்வோரை பொல்லாங்கு கொண்டோரை
மெய்கொண்டு வீழ்த்தி மிளிரு!

பாரதிசுகுமாரன்