2022 ஜனவரி க்கு பின் சிறீலங்கா போகப்போறீர்களா? புது அறிவித்தலை கவனமெடுங்கள்

வரும் 2022 ஜனவரி மாதம் முதல் சிறீலங்காக்கு பயணம் செய்யவுள்ளோருக்கான புதிய அறிவித்தல் ஒன்றை சிறிலங்காவின் விமான போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது.

அதன்படி சிறிலங்காவுக்குள் நுழைய வரும் பயணிகள் சிறிலங்கா வருவதற்கு முன்பாகவே கட்டாய சுகாதார தகவல்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்யவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இணையத்தின் மூலமாகவே பூர்த்தி செய்யக்கூடிய இந்தப்படிவத்தை முன்கூட்டியே பூர்த்திசெய்து பயண தாமதங்களை ஓரளவுக்கு குறைக்கமுடியும் என எதிர்வுகூறப்படுகிறது.

பூர்த்தி செய்யப்படவேண்டிய படிவ இணைப்பு கீழே

https://airport.lk/health_declaration/index