பிரிட்டனில் கோவிட் எச்சரிக்கை நிலை உயர்வதாக அறிவிப்பு 

பிரிட்டனில் கோவிட் 19 இன் எச்சரிக்கை நிலை , நிலை 3 இலிருந்து நிலை  4 இற்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதே எச்சரிக்கை நிலை 4 கடந்த மே மாதமளவில் பிரிட்டனில் காணப்பட்டிருந்தது.

கடந்த வாரங்களுக்கு முன்னதாக பரவ ஆரம்பித்த திரிவடைந்த கோவிட் 19 இன் ஒமிக்ரோனின் தீவிர பரவலை அடுத்தே இந்த எச்சரிக்கை நிலையுயர்வுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை  இந்த நிலை குறித்து ,   இன்று இரவு  பிரிட்டன் நேரம் 8மணிக்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சன், தனது   விசேட உரையை வழங்கியிருந்தார்.இது மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பானதாகவும் அது மக்களுக்கு விரைவுபடுத்தும் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

பொறிஸ் ஜோன்சன் ஆற்றிய உரை

அதேவேளை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் திங்கட்கிழமை முதல் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பதிவு செய்ய ஆரம்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.