நோர்வேயில் நத்தார் விருந்தில் கொரோனாத்தொற்றுக்குள்ளானவர்களில் 74 % தடுப்பூசியிரண்டையும் பெற்றுக்கொண்டவர்களே.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனாத் தொற்றுக்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நோர்வேயில் அவைகளின் மூலம் ஒரு நத்தார் விருந்து ஆகும். 111 பேர் பங்குகொண்ட அந்த விருந்தில் 98 பேர் தடுப்பு மருந்துகளை முழுசாகப் பெற்றுக்கொண்டவர்களே என்பது நோர்வேயின் தொற்று நோய்த்தடுப்பு திணைக்களத்தின் ஆராய்வுகள் மூலம் தெரியவந்திருக்கிறது. 

அந்த விருந்தினர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 74 % பேருக்குக் கொவிட் 19 தொற்று உண்டாகியது. 60 % ஒமெக்ரோன் தொற்றுக்கு உள்ளாகினார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு இலேசான சுகவீனமே உண்டானது. எவருமே மருத்துவ சேவையை நாடத் தேவையில்லாமல் போனது.

சாள்ஸ் ஜெ. போமன்