“உபநிஷத் ஓர் அறிமுகம் “நூல் வெளியீட்டு நிகழ்வு

பேரா.இராசேந்திரன் எழுதிய,” உபநிஷத் ஓர் அறிமுகம் ” நூல் வெளியீட்டு நிகழ்வு நாகர்கோவில் புத்தகக்கண்காட்சியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வுக்கு நெய்தல்வெளி ஜஸ்டின் திவாகர் தலைமை வகித்தார் தமிழ்வானம் சுரேஷ் வரவேற்புரையை வழங்கியிருந்தார்.

உபநிஷத் ஓர் அறிமுக உரையை ஊடகவியலாளர் ஜவஹர்ஜி வழங்கி நூலை வெளியிட, முனைவர் கே.எல்எஸ்.கீதா அதைப்பெற்றுக்கொண்டார்.

நூல் குறித்த விமர்சன உரையை அருட்பணி ஆன்றனி கிளாரட், இலக்கிய விமர்சகர் ஆர்.பிரேம்குமார்,மற்றும் சண்முகமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். நிறைவில் பேரா.இராசேந்திரன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை தக்கலை ஐ.கென்னடி மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கியும் இருந்தார்.

இந்நிகழ்வை காலகட்டம்,தமிழ்வானம் நெய்தல்வெளி இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நெறிப்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.