பயணம்

நமக்கென
நல் நோக்கங்கள்
பலயிருக்க

நழுவாது
தனை எண்ணி
சுழன்றாலும்

சில
தாக்கங்கள் தரித்திரமாய் – கடும்
சிறுமைகள்
உருவத்தில் வாய் பிளக்க..

முடியாதென
நீயும் விழுந்து விட்டால்.,
அழகான இப்பிறவிக்கு அர்த்தமுண்டோ..?

இம்சிக்கும் இடர்களும்
இனிதென்று
முடங்காமல்
நகருவதே நன்றாம்..

தலையினில் அடிபடும்
ஆணிகள் தான்
கடவுளின் படங்களையும்
தாங்கி நிற்கும்….

வலிகள் மேல் வலி படும்
வாழ்க்கையும் தான்
வசந்தமாய் மாறி
சொக்க வைக்கும்…

உனை எண்ணி
இருப்பவர்கள்
எத்தனையோ பேர் …

அவர் நினைவுகளே
நம் வெற்றிக்கு
ஆணி வேர் …

சுட்டு விடும்
நினைவுகளை
விட்டுவிட்டு

மொத்தமாய் கதறி
உனை தேற்று…

எட்டி விடும் தூரத்தில்
வெற்றி யென
எண்ணத்தை சத்தாக
நீ மாற்று….!

எழுதுவது :வெண்பா பாக்யா