எண்ணச் சிதறல்கள்

வாடிப் போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது.
வாழ பிறந்த நாம்
ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்வோமே!

இருக்க இடம் தரும் மரமே நமக்கு நிழல்
கொடுக்கும் போது
நமக்கு உதவியவரை மறக்காமல் நன்றி சொல்லலாமே!

உடைந்த கரும்பில் தான் இனிய சுவை இருக்கிறது!

உடைந்த மேகங்கள் தான்
மழை பொழிகின்றது!

உடைந்த நெல் தான்
விதையாகிறது

உடைந்த விதைகள் தான் புதிய செடிகளாகிறது!

உடைந்த கடலை தான்
எண்ணெய் கொடுக்கிறது!

அதனால் எப்போதாவது நாம்
உடையும் நிலை
வந்தால்
நம்புவோம்
நமக்கும்
நல்ல காரியம்
நடக்கக் காத்திருக்கிறதென்று!

எழுதுவது:
விஜயலட்சுமி