அந்தமானில் புவியதிர்ச்சி. அதிகாலையில் அதிர்ந்தது

அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஏற்பட்ட புவியதிர்வால் அந்த தீவுகளின் அதிகாலை வேளையில் அதிர்ந்தது.

தேசிய புவியியல் தகவல் மையம் அந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்தது.

இந்தியாவிலும் அதனை அண்டியுள்ள தீவுகளிலும் அண்மைய நாள்களில் அடிக்கடி புவியதிர்வு ஏற்றபட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஃபோர்ட்பிளேர் நகரின் அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட புவியதிர்வு, 4.4 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

இந்த புவியதிர்வால் எந்தவித உயிரிழப்புகளோ,உடமை இழப்புகளோ ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.