நந்திக் கடலே


முள்ளிவாய்க்கால் மண்ணே
இனம்சுமந்த துயரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
நீ மறக்க மாட்டாய்…

இனம் சுமந்த வலிகளுக்கு
பழிதீர்க்க எங்கோ ஒரு விதை
காத்திருக்கும்…
தமிழர்களின் தொன்மை வேர்களில் சேமிக்கப்படும் மாவீரர்களின் தியாகங்கள்…

விலைமதிப்பில்லா எங்கள் விடுதலை செல்வங்கள்
விதையாகி போன எங்கள் நந்திக்கடலே..
முள்ளிவாய்க்கால் மண்ணே.
நாங்கள் இல்லாமல் போகலாம்
ஆனால் நீ நாளை தலைமுறைக்கு நடந்த கொடுமையை கூறு..
பச்சைப் படுகொலை நடந்த
துணை புரிந்த பாரத தேசத்தின்
பாவிகளை அடையாளம் காட்டு..

நந்திக் கடலே
முள்ளிவாய்க்கால் மண்ணே.
வரும் தலைமுறைக்கு வரலாற்றையும் விடுதலைஅரசியலை
எடுத்துகூறு…

எழுதுவது :
வாணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *