மொரோக்கோ வெற்றி| முதல் ஆபிரிக்க நாடாக அரையிறுதிக்குள்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இன்றைய காலிறுதிப்போட்டியில், பலமான போர்த்துக்கல் அணியை மொரோக்கோ அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. முதலாவது ஆபிரிக்க நாடாக அரையிறுதிக்குள் மொரோக்கோ நுழைந்தது.

இன்றைய போட்டியில் போர்த்துகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது மொரோக்கோ.

பல்வேறு வாய்ப்புகளையும் போர்த்துக்கல் தவறவிட , போட்டியின் 42ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணி வீரர் Nesyri அபாரமான கோல் அடித்து மொரோக்கோ வெற்றிக்கு வழிவகுத்தார்.

அது மட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டியின் 52ஆவது நிமிடங்கள் வரை போர்த்துக்கல் அணியின் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

நிறைவில் பலமான அணியாக எதிர்பார்க்கப்பட்ட போர்த்துக்கல், காலிறுதிப் போட்டிகளுடன் வெளியேறியது உதைபந்தாட்ட ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியளித்துள்ளது என்பது மட்டும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *