ஆஜென்ரீனா இறுதிப் போட்டிக்குள்|தோற்றது குரோஷியா

உலகக்கிண்ண காற்பந்தாட்டப்போட்டிகளின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் பலமான ஆஜென்ரீன அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

காலிறுதிப்போட்டியில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு வந்த குரோஷியா, அரையிறுதிப்போட்டியில் ஆஜென்ரீனா அணியிடம் 3 -0 என்ற கோல்கணக்கில் மண் கவ்வியது.

ஆரம்பம் முதலே பலத்தை வெளிப்படுத்திய ஆஜென்ரீன அணி ஆட்டத்தின் முதற் பாதியில் 2 கோல்களுடன் முன்னிலை வகித்தது.

இடைவேளையை தொடர்ந்தும் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தி மேலும் ஒரு கோலினை அடித்து 3 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாதனை நிலைநாட்டியது.

இதன்படி ஏற்கனவே ஐந்து தடவைகள் இறுதிப்போட்டிக்குள் வந்த ஆஜென்ரீனா ஆறாவது தடவையாக இறுதிப்போட்டிக்கு வர, கடந்த தடவை இறுதிப்போட்டிக்கு வந்த குரேஷியா அரையிறுதியோடு வெளியேறியது.

ஏற்கனவே இரண்டு தடவைகள் ஆஜென்ரீன அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *