இங்கிலாந்தின் அபார வெற்றி | ஈரானுக்கு அடித்த 6 கோல்கள்

உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தின் இன்றைய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.

ஈரானுக்கு எதிரான இன்றைய பேட்டியிலேயே இந்த வெற்றியை 6 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் பதிவு செய்தது.

ஆட்டத்தின் முதற் பாதியில் 3 – 0 என்ற அடிப்படையில்  இங்கிலாந்து தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

இங்கிலாந்தின் முதற்கோலை Bellingham ஆரம்பித்து வைக்க Saka மற்றும் Sterling அடுத்த இரண்டு கோல்களையும் அப்போது அடித்திருந்தனர்.

இடைவேளையைத் தொடர்ந்து ஈரான் இரண்டு கோல்களையும்  இங்கிலாந்து மேலும் மூன்று கோல்களையும்  அடித்தது.

ஈரான் சார்பில் Mehdi Taremi ஒரு பெனால்டி உதை உட்பட இரண்டு  கோல்களையும் அடிக்க  இங்கிலாந்து சார்பில்  Saka , Rashford மற்றும் Grealish மற்றய மூன்று கோல்களையும் அடித்தனர்.

அதனடிப்படையில் இங்கிலாந்து தன் முதலாவது வெற்றியைப்பதிவு செய்து குழு B இல் மூன்று புள்ளிகளை தக்க வைத்தது.

இங்கிலாந்து மற்றும் ஈரான்  அடுத்த போட்டியாக வரும் வெள்ளிக்கிழமை முறையை அமெரிக்காவுடனும் வேல்ஸ் அணியுடனும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *