“இந்து” சமரில் வென்றது யாழ் இந்துக்கல்லூரி…!

உலக கிண்ண தொடர் போட்டிகள் தற்போது மிக சுவாரஷ்யமாக நடைப்பெற்றுவருகின்றன.அதில் இலங்கை அணி மிக சிறப்பாக பிரகாசித்து வருகிறது. இந்த கிரிக்கெட் காச்சலோடு இன்னும் ஒரு கிரிக்கெட் காச்சல் தான் நமக்கு வழங்கிய காச்சல்.

ஆம்
வடக்கின் யாழ் இந்துக்கல்லூரிக்கும் மேற்கின் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 12வது கிரிக்கெட் சமர் ஜூன் 30,ஜூலை 01 ம் திகதிகளில் P.Sara oval மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஒன்பது விக்கட்டுக்களால் யாழ் இந்துக் கல்லூரி வெற்றி வாகை சூடியது.

இந்த இரு பாடசாலைகளுக்கும் இடையிலான சமர்களை உலகெங்கும் வாழும் விளையாட்டுப் பிரியர்கள் விரும்பி மிக எதிர்பார்ப்புடன் நோக்கும் போட்டியாகும்.

இதே வேளை இதற்கு முன்னைய நாள் மாலை விவாத போட்டியும் சிறப்பாக நடைப்பெற்றமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *