கண்சத்திர சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு..!
கண் சத்திரசிகிச்சையின் பின் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு தேசிய கண் வைத்திய சாலையில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வாமை காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கமைய, அவருக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பாமல் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய அறுவை சிகிச்சைக்கு சுய நினைவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட ஊசியால் தனது மனைவி இறந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 5ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று பிரேதபரிசோதணைக்கு பிறகு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குழு ஒன்றின் மூலம் விசாரணை நடத்தப்படுவதாக சுகாதாரதிணைக்களம் தெரிவித்துள்ளது.