சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு நிலவுவதாக மக்கள் விசனம்…!

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.அண்மையில் சமையல் எரிவாயுவின் விலையினை லிட்ரோ நிறுவனம் குறைந்திருந்தது. இந்நிலையில்,பல்வேறு பிரதேசங்களில் சமையல் எரிவாயு இன்மையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பலகொல்ல,கெங்கல்ல,திகன போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட சமையல் தேவைக்கு எரிவாயுவினையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடானது இம்மக்களுக்கு பெறும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலை வேளையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் நேரத்தில்,அவர்களுக்கான காலை உணவினை சமைக்க முடியாது பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆகவே தமது தேவைகளை நிறைவேற்ற உரியமுறையில் சமையல் எரிவாயுவினை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *