‘மஹேந்திர சிங் தோணி’ ஒரு பார்வை..!
கிரிக்கட் உலகில் பலர் பல்வேறு சாதனைகளை புரிந்து மக்கள் மனதில் நீங்கா இடத்தினை பிடித்துள்ளனர் அந்த வகையில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த ஓர் வீரர் தான் மகேந்திர சிங் தோணி .
இவருக்கு இந்தியாவில் மட்டும் ரசிகர் கூட்டம் இல்லை, உலகும் முழுதும் ஓர் ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் ஓர் வீரர்.
2004 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார் அதன் பிறகு 2005 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியினை தொடர்ந்து தினேஷ்கார்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார் .இதன் போது 30ஓட்டங்களையே பெற்றார்.
அதன் பிறகு நடந்த போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி 10,000 மேற்பட்ட ஓட்டங்களை குறுகிய காலத்தில் பெற்றுள்ளார்.
இவர் தலைமையில் 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. மற்றும் பல்வேறு விருதுகளை பெற்ற ஒரே வீரர் என்ற வாசகத்தையும் தன்னிடம் கொண்டுள்ள ஒரு வீரராவார்.ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ,2009 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது,2018ஆம் ஆண்டு பத்ம பூசண விருது என பல விருதுகளை தன் வசப்படுத்திய ஒரு வீரராவார்.
2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கிளின்ட் மெகேயின் பந்தில் 112 மீற்றர் தூரத்தில் 6 ஓட்டங்களை எடுத்தார்.இது இன்றும. சிறப்பித்து குறிப்பிடப்படுகிறது.
மற்றும் இந்திய ப்ரிமியர் லீக் போட்டிகளில் அதிக ஏலத்தில்(1.5 மில்லியன் அமெரிக்க டொலர்) எடுக்கப்பட்ட ஒரு வீரராக மஹேந்திர சிங்தோணி காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.
இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற தோணி இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.இனிமையான பிறந்ததின நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்.