சிறுமி தாக்கி சிறுவன் மரணம்…!

நேற்றைய தினம் (07.07.2023) 12 வயது சிறுமி தாக்கியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் வசிக்கும் இரு சிறுவர்களும் கடந்த 4ம் திகதி விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்,12 வயது சிறுமி 10வயது சிறுவனை கம்பியால் நெற்றி பகுதியில் தாக்கியுள்ளார்.இதன்பின்னர் நீர் கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இச்சிறுவன் உயிரழந்துள்ளான்.

சிறுமியை கைது செய்து நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபின் ,பாதுகாப்பு காரணங்களுக்காக சிறுவர் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில் , இவரது தந்தை வேறு திருமணம் முடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *