பேருந்து விபத்தில் 10 பேர் பலி

விபத்துக்கள் நடக்கும் போது ஒவ்வொரு தடவையும் பல உயிர்கள் இவ் உலகை விட்டு பிரிகின்றன.அந்தவையில் கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள கொடலியபாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேர் மரணம் என பொலிஸ் அறிவித்துள்ளது.

மன்னம்பிட்டி பாலத்திற்கு அருகில் இருக்கும் பலகை பாலத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது காத்தான்குடியைச் சேர்ந்த பஸ்வண்டி எனவும் இதில் 40 பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

பஸ்ஸில் இருந்தோரை மீட்கும் பணிகள் இடம் பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *