தாயும் மகளும் காணவில்லை..!

23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

குறித்த யுவதியின் கணவர் கடந்த 19ம் திகதி கிருலப்பனை பாமன்கடைக்கு சென்று இரவு 10.00மணியளவில் வீடு திரும்பிய போது மனைவியும் பிள்ளையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இவர் உறவினர்களிடமும் விசாரித்துள்ளார் எனினும் பலர் வரவில்லை என்று கூறி இருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் மகள் தகவல் தெரிந்தால் 0112-850700 என்ற இலக்கத்திற்கு மஹரக ம பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *