நாய் கூண்டில் 06 குழந்தைகளை அடைத்து வைத்திருந்தவர்கள் கைது..!

6 குழந்தைகளை நாய் கூண்டினுள் அடைத்து வைத்து சித்திர வதை செய்ததன் அடிப்படையில் அமெரிக்காவின் லோஷ் வேகாஸ் நகரில் வாழ்ந்த தாய், தந்தை இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு உணவு வழங்காமல் அடித்து துன்புரித்தி நாய் கூண்டினுள் அடைத்து வைத்திருந்திருக்கின்றனர்.

தனது கணவர் தாக்கியதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாய் இருப்பதை கண்டு தாயார் காவல் துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவித்துள்ளார்.

இதற்கமைய குழந்தைகளை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,குறித்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *