பஸ் தரிப்பிடத்தில் நின்ற இளைஞனிடம் தங்க நகை திருட்டு..!

பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞனை அழைத்து சென்று அணிந்திருந்த தங்க நகையினை அபகரித்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

புளத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் மாலை நேர தனியார் வகுப்பு நிறைவடைந்து வீட்டுக்குத் வருவதற்காக பஸ் தரிப்பிடத்தில் சனிக்கிழமை (29) காத்திருந்துருக்கிறார்.அந்த தருணத்தில்

அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர தான் ஒரு பொலிஸ் அதிகாரி எனவும், விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அவ்விளைஞனை ஏற்றியுள்ளார்.

பிறகு மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு செலுத்தாது இறப்பர் தோட்டம் ஒன்று செலுத்தியுள்ளார்.

அங்கு வைத்து இளைஞனை அச்சுறுத்தி அணிந்திருந்த ஆடைகளை கழற்றி, கைகளை கட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்துச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக ,குறிப்பிட்ட
இளைஞன் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *