அமெரிக்க பொதிக்கு ஆசைப்பட்டு உள்ளதை இழந்த பெண்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்துள்ளார்.
ஒரு நாள் யாதார்த்தமாக
“உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் நீங்கள் தான் பெரிய பணக்காரர்” என குறித்த பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்களுக்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பி பொதியொன்றை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அந்த பொதியில் 70 ஆயிரம் டொலர், தங்க ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை பார்சலில் அனுப்ப முடியாது இது சட்டவிரோதமானது எனவும் சுங்கதிணைக்களத்தில் இருந்து விடுவிக்க 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதியில் உள்ள 70 ஆயிரம் டொலரை காணொளி எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.இதனை நம்பிய குறித்த பெண் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 95 ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.

இதனையடுத்து எத்த தகவலும் இல்லாத நிலையில் அழைப்பெடுத்து பார்த்திருக்கின்றார் .குறித்த பெண்ணின் தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்துள்ளார்.

இவ்வாறாக பல சம்பவங்கள் பதியப்பட்டுவருகின்றன.ஆகவே மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *