போதைப்பொருள் பாவனைக்கு எதிராக காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்.

அண்மைக்காலமாக இலங்கையில் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது ஒரு சவாலான விடயமாக காணப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் பாவனையில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் காத்தான் குடியில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி நடாத்தப்பட்டது.

இதனை காத்தான் குடி
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது காத்தான் குடி பள்ளிவாயல்களின் நிர்வாகிகள்,இளைஞர்கள்,புத்திஜீவிகள் ,சட்டத்தரணிகள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் ஒன்று திரண்டு போதைப்பொருளுக்கு எதிராக குரல் எழுப்பியதுடன் சத்தியபிரமாணத்தையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *