விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ள தல தோணி..!

இன்றைய கால இளைஞர்கள் விவசாயத்தில் பின் தங்கி நிற்கும் நிலையில் . கிரிக்கெட் உலகில் தல என்று சிறப்பித்து கூறப்படும் M.S தோணி விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

தனது சொந்த ஊரான ராஞ்சியில் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார்.

எங்களுக்கு 40 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் முதலில் 4 முதல் 5 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தோம். 2020 ஆம் ஆண்டு கொரோணா சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விவசாயத்தை மேலும் விரிவாக்கும் யோசனை வந்தது. முழு நேரமும் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். பயிரை வளர்க்கும் செயல்முறை என்னை மிகவும் கவர்ந்தது. வெண்டைக் காயைப் பொருத்தவரை இரவில் நீங்கள் பார்க்கும் ஒரு காய் அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால் அது முழு அளவில் வளர்ந்திருக்கும். இது போன்ற உற்பத்தி நிகழ்வுகள் என்னை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மேலும் உற்சாகப்படுத்தியது. என்று தோணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *