சாவோலா வால் 450க்கும் அதிகமான விமானங்கள் இடை நிறுத்தம்..!

சாவோலா சூறாவளியின் காரணமாக சீனாவின் ஹோங்கோங் கில் 450க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோங்கோங்கில் இருந்து வெளியேற இருந்த பயணிகள் ஹோங்கோங்கிற்கு வரவிருந்த பயணிகள் என பலரும் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.

இதே வேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

சூறாவளியின் காரணமாக பங்கு சந்தை மூடப்பட்டது. மற்றும் ஒரு வார காலத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.மற்றும் ரயில் போக்குவரத்தும மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை கடலோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இன்று மாலை முதல் சூறாவளியின் தாக்கம் பலவீனமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *