எரி வாயுவின் விலையில் மாற்றம்..!

கடந்த 31ம் திகதி நள்ளிரவு முதல் எரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இதற்கமைய போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது எரிவாயுவின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்து காணப்படுவதால் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு ஏற்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.இதன் படி நாளை நள்ளிரவு அமுல் ஆகும் வகையில் இந்த அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பொருட்களின் விலையேற்றம் ,நீர்,மின் கட்டண உயர்வு ,எரி பொருள்,போக்குவரத்து என அனைத்து துறைகளிலும் மீண்டும் அதிப்பை காட்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *