மண்..!

மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை பயணிக்கின்றேன் நான்

சிறு குழந்தையின் விளையாட்டுப் பண்டங்களில் நான்

வீடு கட்டுவதற்கு இன்றைய காலகட்டத்தில் அதிக மதிப்புடைய அரிய ஆணிவேர் நான்

ஆற்று ஓரங்களில் உல்லாசமாக உட்கார உதவும் நான்

கடற்கரையில் எத்தனை காலடி தடயங்களைக் காண்கிறேன் நான்

என்னுள் எத்தனை விதைகளை விதைத்தாலும் விருட்சமாக்குகின்றேன் நான்

முன்பொரு காலத்தில் என்னை மட்டும் வைத்து மாளிகை ஆக்க உதவிய நான்

பிறக்கும் குழந்தைக்கு கூட தொட்டில் கட்ட கூடவே இருப்பேன் நான்

மனிதன் கடைசி தருணங்களில் என்னை வைத்து தான் முடிகின்றனர்

நான் எவ்வளவு பொக்கிஷமானவன் என்னுள் எனக்கே பெருமை 😊

ஆர் .ஜே உமா தேவி

இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *