கீதை மொழியானவன்

தலைப்பு –
சிங்காரக் கண்ணனேவா

சிங்காரக் கண்ணனேவா
வெண்ணெய் உண்ணவா//
வங்கக்கடல் வண்ணனே
விளையாட்டுப் பிள்ளையே//

குழல் ஊதும்
கூடிடும் பசுக்கள்
கீதைமொழி கேட்கும்
வாழ்வின் பக்தர்கள்

உன்னை நினைக்கிறேன்
உருகியே நிற்கிறேன்//
மண்ணுலகில் பிறந்தோரை
நலம்வாழ வைப்பவனே//

சுழலும் சக்கரம்
கொண்ட. என்னவனே//
வாழ்வில் ஒளிபெற
உன்கரம் பற்றுகிறேனே//

ஹேமா ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *