ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதவுள்ளன..!

நேற்றைய தினம் பாகிஸ்தான் இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரமதாச விளையாட்டரங்கில் பல பரீட்சை நடத்தின. இதில் வெற்றி கண்ட இலங்கையணி இந்திய அணியுடனான இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டி எதிர்வரும் ஞாயிற்று கிழமை நடைப்பெற இருக்கிறது.

இது 13 வருடங்களுக்கு பிறகு இரு அணிகளும் சந்தித்து கொள்ளும் ஆசிய போட்டியாக அமைகின்றது.

ஆசிய கிண்ண இறுதி போட்டிகளில் இதுவரை 8 தடவை இலங்கை இந்திய அணிகள் மோதி இருக்கின்றன. இதில் 5 தடவை இந்திய அணியும் ,3தடவை இலங்கையணியும் வெற்றிப்பெற்று இருக்கின்றன.

இது வரையிலும் இந்தியா 7 சம்பியன் கிண்ணங்களையும் இலங்கை 6 சம்பியன் கிண்ணங்களையும் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருத்திருந்து பார்க்கலாம் இம்முறை யார் சம்பியன் கிண்ணத்தை வெல்கிறார்கள் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *