உயர் தரப்பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன..!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கால எல்லை போதியளவாக இல்லை என்பதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் நவம்பர் மாதம் 27 ம் திகதி முதல் டிசம்பர் 21 வரை பரீட்சைகள் நடைப்பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பரீட்சைகள் நடாத்துவதற்கான புதிய திகதி பின்னர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *