பதவியை ராஜினாமா செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளமை நீதித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23ஆம் திகதி அவர் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விலகலுக்கான காரணம் தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்பட்ட பதற்றம் எனக்குறிப்பிட்டு அதை தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற பேரினவாத அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் நீதவான் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மேல்மட்ட அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் குறித்த விலகலுக்கான காரணமாகலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நீதவான் திரு. சரவணராஜா தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தன் பின்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *