சுனாமி போல் வருவதுண்டு…!

இயற்கைக்கென்றொரு உடலுண்டு
அதற்கும் தன் உடல் உபாதைகள்
வருவதுண்டு …!

பூமிக்குள்ளே
பற்பல தட்டுக்களாய் பூமியின்
வடிவம் தானுண்டு …!

அந்தத் தட்டுக்களின் நகர்வால்
பூகம்பங்கள் வருவதுண்டு …!

அதுவே கடலுக்கு அடியில்
நிகழும் போது
சுனாமி போல் வரும் – கடல் கொந்தளிப்புக்களும் உண்டு …!

மேலும் மனிதர்கள் நாம் செய்யும்
தீமைகளால் இயற்கையின்
உடல் நிலை கெடுவதுவதும் உண்டு …!

எது எப்படியோ , அது
இயற்கையாக வந்ததோ ?
மனித இனத்தின் பேராசையால்
செயற்கையாக வந்ததோ ? …!

சீற்றங்கள் வருமே
இயற்கைக்கும்
தன்னுடல் பேணும் அக்கறையால் …!

நம்முடலுக்குள் ஏதேனும்
சிக்கல்கள் நேர்ந்தால்
அதனை சீர்படுத்த ,
எடுத்துரைக்க வரும்
காய்சலைப் போலே …!

ஆக
இயற்கைச் சீற்றமும்
இயல்பெனக் கொள்க …!

கிடைத்த வாழ்வை
இனிதாய் வாழ்க …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *