அமைதியாய் காத்திருக்கும் நூலகங்கள்..!

நூலகம்….. ❗


உன்னை
நீ உணர்ந்து கொள்ள
உலகம்
அதை தெரிந்து கொள்ள
கண்கள் பெற்று
நீ
கபடம் நீக்கி
நீ
வாழ்வை ஜெயிக்க

கற்றவர் அனுபவம்
நீ
கற்றுக்கொள்ள
உற்றார்
உறவினர்
ஊருக்குள்ளே
உலகம் முழுவதும்
உன் புகழ் பறந்து செல்ல

உன்
தேடலின் பசிக்கு
தெவிட்டா விருந்தளிக்க
அல்லும் பகலும்
ஆயிரம் ஆசான்கள்
ஆயத்தமாய் அங்கிருக்க

அனுதினம் சென்று வர
அனுமதியும் தந்திருக்க
அன்போடு அரவணைக்க
அன்னையென
அமைதியாய் காத்திருக்கும்
அந்த நூலகங்கள்.. ❗

அ. அ. நவாஸ்
வவுனியா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *