எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சர்வதேச எயிட் தினம் நேற்றைய தினம் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் யாழில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது

இது தொடர்பாகவடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவிக்கையில்
“ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாகக் கூடிக் கொண்டே போகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள்.

அதனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால்,

அதனை பாவிக்கும் மற்றவருக்கும் தொற்றக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.

இலங்கையில் தற்போது 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால்,

90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.

அதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது”

என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சிறந்த சமூகத்தை உருவாக்க போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *