தமிழின் ரகசியம்..!

தமிழ் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை அது இன்று தான் நிறைவேறியது… நண்பர்களே இக்கவிதை பற்றி கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்…..

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

தமிழோடு ஒரு நிமிடம்…. படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

தமிழே!
எனக்கு மட்டும் சொல்வாயா
அந்த ரகசியத்தை…..?

சந்தனம் கூட
அரைத்தால் தான்
மணக்கிறது……
நீ உரைத்தாலே
மணப்பது எப்படி…..?

தேன் கூட
ருசித்தால் தான்
சுவைக்கும்…..
உன்னை
வாசித்தாலே
சுவைப்பது எப்படி….?

கன்னிப் பெண்களைக் கூட
அணைத்தால் தான்
சுகம் கிடைக்கும்……
உன்னை நினைத்தாலே !
சுகம் கிடைப்பது எப்படி ?

ஒரு மழலை செல்வத்தை
பெற்றெடுக்கவே
பெண்களுக்கு
உயிர் போய்
உயிர் வருகிறது…..
நீ எப்படி
இத்தனை
மழலை மொழிகளை
பெற்றெடுத்தாய்……?

26 எழுத்து கொண்டவனே!
எல்லா நாட்டையும்
அடிமையாக்கத் துடிக்கிறான்….
247 எழுத்துக்கொண்ட
நீ எப்படி
இவ்வளவு
அமைதியாக இருக்கிறாய்?
அதனால் தான்
அவன் கூட
உன்னை விரும்புகிறானோ….?

பிற மொழிச் சொற்கள்
உன்னோடு
கலப்பதால்
நீ அழிந்து விடுவாய் என்று
பலர் அச்சப்படுகிறார்கள்….
கடலில் எத்தனை
ஆறுகள் கலந்தாலும்
கடலின் தன்மையை
மாற்ற இயலாது என்பதை
இவர்களுக்கு எப்படி
புரிய வைப்பது….?

கல்தோன்றி மண்
தோன்றா முன்
தோன்றியவன் நீ என்று
சொல்கிறார்கள்……
அதேபோலத்தான்
கல் அழிந்து
மண் அழிந்தாலும்
நீ அழிய மாட்டாய்….!!!

வாழ்க உன் புகழ்….!!
வளர்க உன் பெருமை….!! *கவிதை ரசிகன் குமரேசன்*

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *