கனவுகளோடு மனிதன்..!

கனவுகளோடு மனிதன்


மகிழ்ச்சிப்
பெருவெள்ளம்
பெருகி ஓடட்டும் …

ஓயாது கொட்டித்
தீர்த்த நீரில் சென்னை
மிதப்பதிலிருந்து
மீண்டு …

கனவுகளோடு மனிதன்
நடக்கிறான் , ஓடுகிறான்
தூங்கவும் செய்கிறான் …

ஆனால் ஒரு புயலோ ,
பூகம்பமோ ! வேறு வேறு
இயற்கையின்
இடர்பாடுகளோ !

மனிதனின்
செயற்கையான
போர்க் காலங்களோ …

மனிதனை
திசைமாற்றிப்
போட்டுவிடும் ….
அபாயங்கள்
எப்போதும் பூமியில்
இருந்து கொண்டே தான்
இருக்கும் …

அதனால்
இயற்கையின்
நிலையே வாழும்
உயிர்களின் நிலை
என உணர்ந்த படி …

மகிழ்ச்சிப் பெரு
வெள்ளத்தில்
மிதக்கக் கற்போம் …

இடர்களிலெல்லாம்
எவ்வுயிர்க்கும்
கரம் கொடுப்போம் …

வாருங்கள்
மனிதனாக இருப்போம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *