நீங்கள் இந்த வலையில் சிக்கி இருக்கிறீர்களா?

தலைப்பு : கவலை 😔☹️


கவலை,கவலை எனும் வலையில் வசமாகி,

நிழலை நிஜமாக்கி நிஜத்தை நிழலாக்கி,

மோசமாகி நாசமாகும் மனமே உனக்கு கவலையில்லா காலமேது சொல்லிடு,

மண்ணீல் மலரூம்போதே பருகிடு்ம் பாலிலிருந்து

தின்றிடு்ம் பண்டம் வரை கிடைத்திட கவலை ,

வளரும் வயதில் கல்விக்கவலை,வாலிப வயதில் காதல்கைவர கவலை ,

பக்குவ வயதீல் பணியின் மீதும் பணத்தின் மீதும் கவலை களம்பதிக்க,

திரூமண பந்தத்தில் சுகிர்த்தாலும் ,பகட்டு வாழ்விற்கு பாந்தமில்லா பல கவலை,

திரும்ப உனக்கு மலரூம் மழலையிலிரூந்து அர்த்தமில்லாமல் ஆரம்பமாகி,

விழ வைக்கிறது வலையில் வளைத்துணை கவலையாக மாறி,

மனிதனாக பிறந்த நீ போதுமென்ற நிறைமனதுடன் என்று நிறைகிறாயோ,

அன்று தான் கவலையெனும் காட்டாற்று வெள்ளம் உன்னை சூழ்ந்தடித்திடாமல் சுகபடுவாய்,

கவலையெனும் கூண்டை ஊருவாக்கி நீ கைதியாய் உரூக்குலைந்து போவதும்,

க(வலை)வலையெனும் கூண்டையொடித்து குன்றாமல் வாழ்வதும் உன்னீடமே உள்ளதென உணர்ந்திடு 👍,

சாந்தி குமரன்,சென்னை 🙏.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *