இது எனக்கு போதுமானது…!


பசி


பசி
புவிவாழ்
உயிர்களுக்கெல்லாம்
இயல்பானது …
அது குடல் பசியாயினும்
உடல் பசியாயினும் …

ஆனாலும் நம்
மனித இனத்தின்
மனப்பசி இருக்கிறதே …
அதற்கு எதைக்
கொடுத்தும்
அமைதியடைவதில்லை …

இது எனக்குப்
போதுமானது என
அமைதி பெரும்
மனங்கள்
அரிதினும் அரிது …

செல்வம் என்பது
சிந்தையின் நிறைவே …

இல்லையெனில்
மரணம் வரையில்
தொடர் ஓட்டம்
நிற்கப் போவதே
இல்லை …

அமைதி என்பது
எப்போதும் கிட்டப்
போவதும் இல்லை …

இங்கே
நிறைவடையாத
மனங்கள் அதிகம்
உள்ளவரை
ஏற்றத் தாழ்வுகள்
மறையப் போவதும்
இல்லை …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *