வலைப்பின்னலும் வாழ்க்கையும்..!

இன்ஸ்டாகிராம்


வலைப்பின்னல்
வாழ்க்கையில்
இதுவும் ஒன்று …

தனக்கெனவும்
ஒரு கால அளவைத்
திருடிக் கொள்வதில்
இன்ஸ்டாகிராமும்
ஒன்று …

ஏமாற்றவும் , ஏமாறவும்
இப்போது
வலைத்தளங்கள்
பயன் படுத்தப்
படுகின்றன …
என்று சொல்லிக்
கொள்ளவும்
வாய்ப்புகள் உண்டு …

ஆனால் புதியதோர்
உலகம் வேண்டும்
என்று எழுத
வருபவர்களும்
உண்டு …

ஒரு வேளை
மகாகவி பாரதியின்
காலத்திலேயே
இந்த வளர்ச்சி
இருந்திருந்தால்
ஒரு உலகலாவிய
மாற்றமே கூட
வந்திருக்கக் கூடும் …

விட்டு
விடுதலையாகிய
மானுடம் பூமியெங்கும்
ஞான வெளிச்சத்தில்
அமைதி
கொண்டிருக்கலாம் …

யார் கண்டார் அதற்கு
நேர்மாறாகவும் …

பாரதியும் … பொழுது
போக்க வந்து போகும்
பலரில் ஒருவனாக இருந்து
காணாமலும்
போயிருக்கலாம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *