மின்சார கட்டணத்திற்கு பாதி சம்பளத்தை வழங்கும் மக்கள்…!

மின்சாரமும் மக்களும்

மின்சாரத்தை தொட்டாலே பயம் ஆனால் மின்சார கட்டணம் கேட்டாலே பயம் மக்களுக்கு

சம்சாரத்தின் தொல்லையை விட மின்சாரத்தின் தொல்லையே அதிகம்

எல்லாமே இணையதள வழியில் மின்சாரமும் கிடுகிடு என்று உயரும் வழியில்

வாங்கும் சம்பளத்தை விட மின்சார கட்டணமோ எங்கோ செல்கின்றது

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு அதிர்ச்சி தகவல் மின்சார கட்டணம்

எல்லாமே இணைய வழியில் கிடைக்கின்றது மின்சாரமும் நேர்வழியில் கிடைக்குமா சிக்கனமாக…

புயல் பீதியை விட மின்சார கட்டணத்தின் பீதி அப்பப்பா

இன்றைய கால மக்களும் அன்றைய கால மக்களைப் போல மெழுகுவத்தையிலே இருக்கலாமோ என்ற சூழ்நிலைக்கு உட்படுத்தி வைத்தது மின்சார கட்டணம்

மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும் மின்சார ஸ்விட்ச் தொட்டாலே பயங்கர பதட்டம்

மின்சார சிக்கனமே என்ற கேள்விக்கு அர்த்தமில்லாத இன்றைய நிலை …..

கவிஞர் நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *