தாயை கண்டு ஓடிய சிறுவன் விபத்தில் உயிரிழப்பு…!

தாயை கண்டவுடன் மகிழ்ச்சியில் தாயிடம் சென்ற மகன் இடையில் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுஎத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

16 வயதுடைய விசேட தேவையுடைய சிறுவனே குறிப்பிட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அமீர் தீன் யாசீர் அறபாத் என்ற சிறுவனே பஸ் தரிப்பிடத்தில் தாயிற்காக காத்திருந்த நிலையில்,தாயை கண்டது தாயிடம் வரும் போது பிரதான வீதியில் பயணித்த தனியார் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்று மோதியுள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் மரண விசாரணைகளை மேற்கொண்டு ,பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டகளப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைத்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *