இந்த இடத்திற்கு நீங்களும் கட்டாயம் வருவீர்கள்..!

முதுமையில் குழந்தை!!!

முதுமை என்பது அனைவரின் சொத்து!

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு கிடைக்கும்சொத்து!

குழந்தையாக நம்மை சீராட்டி வளர்த்த பெற்றோரை நாம்குழந்தையாக சீராட்டும் நேரம்!

தற்போது நடப்பதென்ன???
பெற்றோரை பேணாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்தல்!

தன்நன்றிக்கடனை செலுத்தாமல் பாவத்தை சேர்கும் பிள்ளைகள்!

பிறந்தபிறவிக்கு பெருமையளிக்காமல் சிறுமைசேர்க்கும் சிறார்கள்!

இன்று அவர்களுக்கு வந்தமுதுமை நாளை உங்களுக்கும் வந்திடுமே!

எதனைவிதைக்கிறோமோ அதனையே அறுவடை செய்வோம்!
நல்லதை விதைப்போம்!நல்லதைப்பெறுவோம்

உனதுநடவடிக்கை பார்த்துவளரும் உனதுவாரிசுகள் உன்னையும் அப்படித்தோனே வழிநடத்துவார்கள்!

பெற்றோரைப் பேணுங்கள்!முதுமை தழுவிய குழந்தைகளாக பேணி அன்பெனும் வார்த்தையை அளவற்றசொத்தாக்குங்கள்!
தினமும் சிறிதுநேரம் ஒதுக்கி இரண்டொரு வார்த்தை பேசுங்கள்!

வார்த்தையின் வலிமை அவர்களுக்கு உடல்வலிமை தந்து முதுமையெனும் குழந்தைப்பருவத்தில் தளிர்நடைபோட வைக்கும்!

கோமதிசிதம்பரநோதன்,உறையூர்,திருச்சி3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *