மின்சார கட்டணத்தை குறைக்க நடவடிக்கை..!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 03 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறை சார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 3ஆண்டுகளில் மின் கட்டணத்தை செலுத்தாத 8 லட்சம் பாவனையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு துண்டிக்கப்பட்ட பாவனையாளர்கள் வறிய மக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறிப்பிட்ட மக்களின் பிள்ளைகளின் கற்றல செயற்பாடுகள் பாதிப்படைவதோடு ,எதிர்காலத்தில் குறிப்பிட்ட சந்ததியினரின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை கருத்திற்கொண்டும் பொது பயன் பாடுகள் ஆணைக்குழு ,மின்சார சபை ஆகியவற்றின் பொறுப்பை கருத்திற்கொண்டும் ,சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ள நிர்ணய செலவுக்கு ஏற்ற விலையாக கட்டணத்தை மாற்ற வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறை சார் மேற்பார்வை குழு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் 5 முன்மொழிவுகளை உடனடியாக அமுல் படுத்துமாறு குறிப்பிட்ட குழு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில் தீவிர வறுமையால் வாடும் குடும்ப அலகுகளுக்கு சிறப்பு நியாய விலை முறையை அறிமுகப்படுத்துதல் என்பனவும. உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *