அதிக விலை அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

மருந்துகளுக்கு அதிக விலை அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிடியவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை தொடர்பில் நுகர்வோர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய மாளிகாகந்த நீதிமன்றத்தில் தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தனியார் வைத்தியசாலை 187 ரூபா பெறுமதியான  சேலைன் போத்தலை 1870 ரூபாவிற்கும் 12 ஆயிரம் பெறுமதியான வெக்சின் ஒன்றை 33 ஆயிரம் ரூபாவிற்கும்,

6 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்தை 17 ஆயிரம் ரூபாவிற்கும் குறித்த தனியார் வைத்தியசாலை  விற்பனை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *