நீர் கட்டணம் செலுத்தாதவர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு..!

கடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்,

அவ்வாறு துண்டிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து 1,909 மில்லியன் ரூபாய் மீளப்பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் தாம் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும்,

இணைப்பை பெற்று மீதி கொடுப்பனவுகளை பின்னர் வழங்க முடியும் எனவும்  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *