சுய நலத்தால் அழியும் இயற்கை..!

எமது அன்பான இயற்கையே …
நாங்கள் வணங்கும் கடவுளைக்
காப்பாற்று … நாங்கள் இன்னும்
உயிரோடு இருப்பதற்கே காரணம்
நாங்கள் வணங்கும்
கடவுளர்கள் தான்
காரணம்…

ஏனெனில் எங்களிடம்
தன்னம்பிக்கை வளர்வதே இல்லை
ஏதாவது ஒரு அவதாரங்கள்
அதிசயமாய் நிகழும் … அப்போது
நாங்கள் எங்களின்
சுயநலத்தால் செய்யும்
அட்டூழியங்களை யெல்லாம்
நாங்கள்
நம்புகிற கடவுளே முன் நின்று
மன்னித்து…
ஓடோடி வந்து காப்பாற்றுவான்…
என்று மட்டுமே இன்று
வரை நம்புகிறோம் …

எங்களுக்கும் …
இந்த உயிரியல் வழி வழியாக
வளர்ந்து வந்த பகுத்தறிவை
வெறுமனே
சோறு தேடவும் அதற்கு
மூலதனமாக இருக்கின்ற செல்வத்தைத்
தேடவும் மட்டுமே பயன் படுத்துகிறோம் …

இங்கே எங்களுக்கு
கடவுளையே படைத்தளித்த இந்த இயற்கையையே அழித்தாவது நாங்கள் வணங்கும் கடவுளைக் காப்பாற்ற மட்டுமே போராடுவோம் … ஏனெனில் நாங்கள் வணங்கும் கடவுளர்கள் எல்லாம் நாங்கள் வணங்குவதால் மட்டுமே உயிர் வாழ்கிறார்கள்… இல்லையெனில் செத்துப் போவார்கள்… அதுதான் எங்களின் முதல் கவலை…

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *