அயோத்தியில் இராமர் சிலை பிரதிஷ்டை..!

இன்றைய அயோத்தியில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் மதியம் 12.30மணியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.அதன் பிறகு விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு வழிப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பெரும் திறளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இக் கோயிலை அமைக்கும் பொழுது நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இருந்து கல் ஒன்றும் எடுத்து செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 23 ம் திகதி முதல் பக்தர்கள் இராமரை தர்சிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *