துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐவர் பலி..!

மாத்தறை பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி டிஃபென்டர் காரில் பயணித்த 5 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்தவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அந்தந்த வாகனத்தில் கலபொடஅத்தே ஞானசார தேரர் அங்கம் வகித்த அப்பே ஜனபல,

கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *