இதற்காக தான் மந்திரிகள்..!


அரசன்
மன்னர்கள் காலம் …

முதல் அமைச்சர் ,
பிரதமர் மக்களாட்சிக்
காலம் …

நாட்டின் நிலப்பரப்பைப்
பொறுத்து ,
ஜனத்தொகையின்
அடர்த்தியைப்
பொறுத்து …
நிர்வாகம் செய்யச்
சுலபமாக …
ஒவ்வொரு
துறைகளாகப்
பிரித்து நிர்வாகம்
செய்யவே மந்திரிகள் …

அவர்கள்
ஆள்வோர்களுக்கும்
ஆலோசனைகள்
வழங்கலாம் …அதை
அரசனானாலும் , இன்றைய
முதல்வர்கள் , பிரதமராக
இருந்தாலும் பொதுவான
நலமெனில் ஏற்றுக்
கொண்டு ஆட்சி
நடத்துவதே நல்லாட்சி …

நான் தான் முதலமைச்சர்
ஆயிற்றே , நான் தான்
பிரதமர் ஆயிற்றே எனத்
தலைக்கனத்தோடு …
எதையும் செய்ய
துணியும் …ஆட்சி
அதிகாரங்கள் எல்லாம்
மக்கள் விரோத
ஆட்சியே
ஆகும் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *