முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக,

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி முச்சக்கரவண்டிகளில் பணிபுரியும் கிட்டத்தட்ட ஐந்நூற்று அறுபது பேர் இதன் மூலம் நன்மைகளைப் பெறுவதுடன்,

முதற்கட்டமாக அம்பாந்தோட்டையை இலக்காகக் கொண்டு எழுபது முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதனூடாக சாரதிகளின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன்,

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நீர் குழாய் பராமரிப்பு, மின் பொறியியல், தச்சு, முடி வெட்டுதல் மற்றும் கட்டிட ஓவியம் போன்ற தெரிவு செய்யப்பட்ட தொழில்களில் தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மற்றும் அதன் மூலம் கூடுதல் வாழ்வாதாரத்தை உருவாக்க தேவையான உபகரணங்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *